Friday, January 2, 2015

சர்வதேச நீதிமன்றில் தன்னை நிறுத்த சதி - மஹிந்த கவலை!

"யுத்தத்தை முடித்து இலங்கையில் அபிவிருத்தியை ஏற்படுத்தியமைக்காகவும் இடம்பெயர்ந்த மக்களுக்கு காணிகளை வழங்கியமைக்காகவும் யாழ்தேவியை கொண்டு வந்தமைக்காகவும் என்னை சர்வதேச நீதிமன்றின் கூண்டில் ஏற்ற எதிரணியினர் முயற்சிக்கின்றனர்." - இவ்வாறு ஆளும் தரப்பின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார். "பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மீது நம்பிக்கை வைக்க முடியாது. 
இரவு 12 மணி வரை என்னுடன் இருந்து அப்பம் உண்டவர் என்னிடம் கூறாமலேயே மறுநாள் காலையில் எதிரணிப் பக்கம் மாறி எனக்கு எதிராகக் களமிறங்கினார். இவரை நம்பி எவ்வாறு நாட்டை பொறுப்புக் கொடுப்பது?" - என்றும் மஹிந்த ராஜபக்‌ஷ கேள்வி எழுப்பினார். நாவலப்பிட்டியவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்படி விடயங்களைத் தெரிவித்தார்.
அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 31 ஆம் திகதிக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் மின்சாரம் வழங்குமாறு கூறியுள்ளேன். அத்துடன், அடுத்த காலப்பகுதியில் அனைத்து குடும்பங்களுக்கும் நீர் வசதி வழங்கப்படும். எனவே, நாம் என்ன செய்யவில்லை என்றுதான் இனி கேள்வி எழுப்பப்படவேண்டும். அத்துடன், ஒழுக்கமுள்ள சமூகத்தைக் கட்டியயழுப்ப நாம் அனைவரும் பாடுபடவேண்டும். 
 
இதேவேளை, இன்று எனக்கு எதிராகவும் எனது குடும்பத்துக்கு எதிராகவும் சேறு பூசும் வகையில் கருத்துகளை வெளியிடுகின்றனர். எனது எந்தவொரு சகோதரரையும் நான் அரசியலுக்கு கொண்டுவரவில்லை. யுத்தத்தை முடிக்கக் கோட்டாபயவை மாத்திரம் அழைத்தேன். சேறு பூசி வாக்குபெறமுடியாது என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். கண்ணாடி வீட்டுக்குள் இருந்துக்கொண்டு கல்வீச முற்படக் கூடாது.
 
சேறு பூசும் அரசியலில் ஈடுபடுவதற்கு எனக்கு விரும்பமில்லை. நாம் ஒருபோதும் வரலாற்றை மறக்கமாட்டோம். இனிவரும் காலப்பகுதி முக்கிய தருணமாகும். நாம் எமது பிள்ளைகளுக்கு வளமான எதிர்காலத்தை வழங்கவேண்டும். நாட்டை முன்நோக்கி அழைத்துச் செல்லவேண்டும். அதற்காக மக்கள் அனைவரும் அணிதிரளவேண்டும். நான் இனவாதியோ அல்லது மதவாதியோ அல்லன்" - என்றார்.

Sunday, December 28, 2014

மனைவிகள் மட்டும் படிக்க வேண்டாம்....!

இல்லத்தரசி அருமை இல்லாதப்ப தெரியும் என்பது முன்னோர் சொல்ல மறந்த பழமொழி. பல் தேய்க்கப் போகிற போதுதான் டூத் பேஸ்ட் காலி என்று தெரிகிறது. பென்சில் வைத்து உருட்டி, இடுக்கி வைத்துப் பிதுக்கி கடும் முயற்சி. பட்டாணி அளவு பேஸ்ட்டை எக்ச்டிராக்ட் செய்யப் போகிற போது டினுங் என்று அழைப்பு மணி அடிக்கிறது. கை நடுங்கி அந்த ஒரு துளி பேஸ்ட்டும் பாதத்தில் சொட்டுகிறது. யாருடா காலையிலேயே டார்ச்சர்? என்று கதவைத் திறந்தால் மேல் வீட்டுப் பெண், அங்க்கிள் அம்மா பேஸ்ட் வாங்க மறந்துட்டாங்களாம்.

கொஞ்சம் வாங்கிட்டு வரச் சொன்னாங்க என்று நிற்கிறாள். சேலை இல்லைன்னு சின்னாயி வீட்டுக்குப் போனா ஈச்சம் பாயைக் கட்டிக்கிட்டு எதிர்ல வந்தாளாம்ன்கிறது இதான் போலிருக்கு. பில்டரில் காபிப் பொடியைப் போட்டு வெந்நீரை ஊற்றி விட்டு வெளியே வந்தால், ராத்திரி வாஷிங் மிஷினில் போட்ட துணியெல்லாம் எடுத்துக் காயப் போடாதது ஞாபகம் வருகிறது. மிஷினைத் திறந்தால் ஒரு வினோதமான துர்நெடி. மறுபடி ரின்ஸ் போட்டால்தான் இது சரியாகும்.

ஆன் செய்யப் போகிற போது ஞாபகம் வருகிறது, கரண்ட் போக இன்னும் பத்து நிமிஷம்தான்! ஐயய்யோ பத்து நிமிஷம்தானா! இந்த ஓசூர் குளிரில் எவன் தண்ணீரில் குளிப்பது ஓடிப் போய் இன்ஸ்டன்ட் வாடர் ஹீட்டரை ஆன் பண்ண வேண்டியிருக்கிறது. டிகாஷன் இறங்கி விட்டதா என்று பார்த்தால் அப்படியே கல்லுளி மங்கன் மாதிரி இருக்கிறது. கரண்டி எடுத்து மண்டையில் ரெண்டு போட்டால் கக்கலும் கரைசலுமாக இறங்குகிறது.

பால் பாக்கெட்டைக் கிழித்து ஊற்றி ஸ்டவ்வை பற்ற வைத்தால் போன் அடிக்கிறது. எடுத்தால் காலையிலேயே ராங் கால். நேத்தி லோட் ஏத்தியாச்சு. நாளக்கி டெலிவரி ஆய்டும் நேத்தி ஏத்தினா நாளைக்கே எப்டிய்யா டெலிவரி ஆகும்? ஏன் ஆகாம, பூனாவிலேருந்தே இப்பல்லாம் நாலு நாள்தான். டிரன்க் ரோடு ரெடியாயிடிச்சு. லாஸ்ட் லோடுக்கே இன்னும் பேமென்ட் வரலை ஏன் வராம, தம்பி பேருக்கு செக் அனுப்பியாச்சே? யாரு ராஜலிங்கம் பேருக்கா? ம்ம்ம் அவனுக்கு அக்கவுண்டே கிடையாதே? அதனால என்ன, செல்ப் செக்தான் அனுப்பியிருக்கேன் எவ்ளோ அமவ்ண்டு? இருபத்திநாலு கோடி என்னது, மொளகா லோடுக்கு இருபத்திநாலு கோடியா? மொளகாயா? கஞ்சா இல்லையா? கஞ்சாவா? யாருங்க பேசறது? இதத்தான்யா மொதல்ல கேட்டிருக்கணும் அதற்குள் புஸ்ஸ்ஸ்ஸ் என்று பால் பொங்குகிற சத்தம்.

ஓஓஓடிப் போகிற போது முட்டியில் பிரிஜ் இடித்து உட்கார வேண்டியிருக்கிறது. அதற்குள் பால் பர்னரில் வழிந்து காஸ் நாற்றம். ஒரு கன்றாவிக் காப்பியைக் குடித்து விட்டு பாத்ரூமுக்கு ஓடினால் வெந்நீர் வழிந்து சாக்கடையில் போய்க் கொண்டிருக்கிறது. குளிக்க ஆரம்பித்தால் மறுபடி வாசலில் பெல். ஐயய்யோ, உடனே போகாவிட்டால் பால்காரன் நான் ஆபிஸ் போய் விட்டேன் என்று நினைத்துக் கொண்டு பால் போடாமல் போய் விடுவானே? மறுபடி ஓட்டம். திரும்பியும் அதே குண்டுப் பெண்.

அங்க்கிள் எங்கம்மாவோட உள்பாவாடை விழுந்திடுச்சு அய்யே இதை ஏன் ஊரெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கே? சத்தம் போடாம திருப்பி எடுத்துக் கட்டிக்க வேண்டியதுதானே? அய்யே சமத்து வழியுது. உங்க வீட்டு பால்கனியில விழுந்திடுச்சு சரி சரி எடுத்துகிட்டு ஓடு அங்க்கிள் உங்க டிரஸ் எல்லாம் கீழ் வீட்டு பால்கனியில விழுந்திடுச்சா?

கிளு கிளுப்பா கருத்து சொல்லப்போறோம் - நோ சொன்ன வித்யா பாலன் , யெஸ் சொன்ன மல்லிகா!

‘டர்ட்டி பிக்சர்’ படத்தில் நடித்து பட்டி தொட்டியெல்லாம் ஃபேமஸ் ஆனார் வித்யாபாலன். இப்போது அதே ஸ்டைலில், கிட்டத்தட்ட அதே பெயரில், அதாவது ‘டர்ட்டி பாலிடிக்ஸ்’ என்னும் படம் கிளுகிளுப்பாகத் தயாராகி வருகிறது. ‘டர்ட்டி பிக்சருக்கு’ வித்யாபாலன் என்றால், ‘டர்ட்டி பாலிடிக்ஸ்’ படத்துக்கு மல்லிகா ஷெராவத். இது கொஞ்சம் ஏடாகூடாமான படம் என்பதால், முதலில் வித்யாவையே அணுகினாராம் இதன் இயக்குநர் பொக்காடியா. 'அதே ஸ்டைல் படமா?  நோ.... என் ஹஸ்பெண்ட்கிட்ட கேட்டுத்தான் சொல்லணும்!’ என்று வித்யா கைவிரித்துவிட, சட்டென பொக்காடியா மனதில் வந்து போனவர் மல்லிகா ஷெராவத். முழு கிளுகிளுக் கதையைக் கேட்டதும், ‘‘ஷூட்டிங் எப்போ?’’ என்று எந்தத் தயக்கமும் இல்லாமல் கிளம்ப ஆரம்பித்து விட்டாராம் மல்லிகா ஷெராவத்.

தேசியக்கொடி நிறத்தில் உள்ள துணியை மல்லிகா ஷெராவத் அணிந்து நடித்ததற்காக, ‘‘தேசியக்கொடியை அவமதித்துவிட்டார்’’ என்று நடுவில் இந்தப் படத்திற்குத் தடை விதித்து, இப்போது மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது ‘டர்ட்டி பாலிடிக்ஸ்!’

‘‘இது எல்லா படங்களைப்போல் சாதாரணமான கவர்ச்சிப் படம் இல்லை. இந்தக் கிளு கிளுப்பு மூலம் கருத்தும் சொல்லியிருக்கிறோம்!’’ என்று 'டர்ட்டி பாலிடிக்ஸ்' பற்றி இயக்குநர் பொக்காடியா, பாலிவுட் தளத்தில் பேட்டி கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தில்,  சில வயதான வெள்ளை வெளேர் அரசியல்வாதிகளின் கறுப்பு ஏரியாவை அம்பலப்படுத்தும் அனோக்கிதேவி என்ற ஒரு ஏழைப் பெண் கேரக்டரில், படுக்கையறைக் காட்சியில் வெளுத்து வாங்கியிருக்கிறாராம் மல்லிகா.

வயதான அரசியல்வாதிகளாக ஓம்பூரி, ஜாக்கி ஷெராப், அனுபம்கெர் என்று மூத்த நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இதில் ஓம்பூரியுடனான நெருக்கமான காட்சிகளில் செம டர்ட்டியாக நடித்து, ‘டர்ட்டி பாலிடிக்ஸ்’ யூனிட்டிடம் பாராட்டுகளை வாங்கிக் குவித்துவிட்டாராம் மல்லிகா. ‘‘ஆரம்பத்தில் ஓம்பூரி சாருடன் படுக்கையறைக் காட்சியில் நடிப்பதற்கு ரொம்பவே தயக்கமாக இருந்தது. ஓம்பூரி சார்தான் என் தயக்கத்தைப் போக்கினார். இப்போது அவருடன் நடிப்பதில் எந்தத் தயக்கமும் இல்லை!’’ என்று தில்லாகச் சொல்கிறார் மல்லிகா.

‘‘மல்லிகா ரொம்ப போல்டான பொண்ணு!’’ என்று பதிலுக்குப் பூரிக்கிறார் ஓம்பூரி. படம் எப்போ ரிலீஸ்னு கேக்கிறீங்களா? பிப்ரவரி 15 அல்லது 26 ரெண்டு தேதிகளும் பரீசிலனையில் உள்ளது. அப்போ தேசிய விருது வாங்கியே தீருவேன்னு சொல்லுங்க மல்லிகா ஜி.

தமிழ்
vikatan

திருட்டுப் பயம் இல்லாத ஒரு ஹை-டெக் கிராமம்...!

இதுபற்றி கேட்டபோது, ஆர்வத்துடன் பேசத் தொடங்கினார், ஊராட்சி மன்றத்தலைவர் கமலா பாலகிருஷ்ணன், “திருட்டு, கொள்ளை, வழிப்பறி போன்ற அசம்பாவிதங்களிலிருந்து ஊர் மக்களை காப்பாற்ற, எல்லாத் தெருக்களிலும் மொத்தம் 7 சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியிருக்கிறோம். அதேமாதிரி இரவு நேரங்களிலும் கண்காணிக்கக் கூடிய வகையில் ‘நைட் விக்ஷன்’ கேமரா வசதியும் உள்ளது. எல்லா தெருக்களிலும் ஒலிப் பெருக்கி அமைத்திருக்கிறோம். தண்ணீர் வரும் தேதி, நேரம் மற்றும் முக்கிய தகவல்களை ஒலிப்பெருக்கி மூலம் தெரிவிப்போம். எந்தத் தகவலை யார் வேண்டும்னாலும் தெரிவிக்கலாம். அலுவலகத்திலுள்ள நோட்டில் பெயர், என்ன காரணத்திற்காக மைக்கில் பேசப்போகிறோம் என்பதை குறிப்பிட்டு, கையெழுத்து போட்டுவிட்டு பேசலாம்.

இதைத்தவிர, காலை 6 மணிக்கும், மாலை 6 மணிக்கும் பக்திப்பாடல்களை தினமும் ஒலிபரப்பு செய்கிறோம். எல்லா தெருக்களிலும் மொத்தம் 36 குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குப்பையை சுத்தம் செய்கிறோம். எந்த வீட்டு வாசலில் குப்பைத் தொட்டி இருக்குதோ அதற்கு பக்கத்திலுள்ள இரண்டு வீட்டுக்கரர்களிடம், ‘இன்று குப்பைத் தொட்டி சுத்தம் செய்யப்பட்டது’ என்று எழுதி கையெழுத்து வாங்குகிறோம். பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தடைசெய்துள்ளோம். இதனால் பிளாஸ்டிக் இல்லா கிராமமாகவும் எங்கள் கிராமம் செயல்படுகிறது.

ஜமீன்தேவர்குளம் டூ துரைச்சாமிபுரம், ஜமீன்தேவர்குளம் டூ முத்துச்சாமிபுரம் ஆகிய பகுதிகளில் பேருந்து செல்வதற்கு வசதியாக தார்ச்சாலையும், கிராமம் முழுவதும் சிமெண்ட் சாலையும் அமைத்துள்ளோம். பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும், ஊர் முழுவதும் சிமெண்ட் சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது. நவீனக் கழிப்பறைகள், குளியலறைகள் என பொதுமக்களுக்கு தனியாக கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு மதத்தின் பெயராலோ, சாதியின் பெயராலோ சண்டைகள் வந்ததில்லை. எல்லோரும் ஒருதாய் பிள்ளையாகவே பழகி வருகிறோம். கிராமத்தைச் சுற்றிலும் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகிறோம்.

இந்த ஊரிலிருந்து படித்து வெளி மாநிலம், வெளிநாடுகளில் வேலை பார்க்கும் இளைஞர்களின் உதவியால்தான் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தியிருக்கோம். இதுவரைக்கும் சி.சி.டி.வி கேமரா மூலம் 6 திருட்டு சம்பவங்களைக் கண்டுபிடிச்சிருக்கோம். சில நாட்களுக்கு முன்பு ஒரு செயின் காணாமப் போச்சு. ஆனால், அன்றைக்கு கேமராவை ஆன் செய்ய மறந்துட்டோம். செயினின் அடையாளங்களைத் தெளிவா மைக்கில் சொல்லி, ‘செயினை எடுத்தவர் யாருன்னு கேமராவுல பாத்துட்டோம். மரியாதையா.. ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஒப்படைத்து விடவும்’ என்று ஒரு பேச்சுக்குச் அறிவிப்பாக சொன்னோம். உண்மையிலேயே அன்னைக்கு ராத்திரியே செயினை நியூஸ் பேப்பர்ல பொட்டலமா மடிச்சு ஆபிஸுக்குள்ள போட்டுட்டாங்க, மறுநாள் உரியவரிடம் செயினைக் கொடுத்துட்டோம். சிசிடிவி கேமரா மாட்டியிருப்பதால் இது ஒரு வசதியாப் போச்சு. எதுவானாலும் கேமராவுல பதிஞ்சுடும்னு ஒரு பயம் இருக்கு. நைட் விஷன் பதிவு வசதி இருப்பதால் இரவில் மது அருந்துவது, தெருக்களில் உறங்குவது தடுக்கப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ் ஊருக்குள் வரத் தாமதமாவதால் மக்கள் அனைவரிடமும் நிதி சேர்த்து ஆம்புலன்ஸ் வாங்கவும் திட்டம் போட்டுருக்கோம். கிராமத்துல ஏதாவது குறைன்னா புகார் பெட்டியில புகாரை எழுதி போட்டுடலாம்.


ஜமீன் தேவர்குளத்திற்கு அருகில் வெங்கட்டா ஓடை என்ற நீரோடை உள்ளது. கயத்தாறு வீரபாண்டியகட்டபொம்மன் சிலைக்கு பின் பகுதியிலுள்ள நீரோடை தண்ணீரானது, வானரமுட்டி வழியாக ஜமீன்தேவர்குளம் வந்தடைகிறது. இந்த ஓடைக்கு நடுவே தடுப்புச்சுவர் கட்டி ஓடையைத் தூர்வாரி சுத்தப்படுத்தினால் சுமார் 20 கிராமங்களுக்கு தண்ணீர் கிடைக்கும். இதற்காக ஒன்றியத்தில் தீர்மானம் போட்டு, நிதிக்காக காத்திருக்கிறோம். கிராமத்தில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்க இருக்கிறோம். ” என்று முடித்தார்.

பஞ்சாயத்து என்றால் அடிப்படை வசதிகளான பேருந்து, கழிப்பறை, சாலை, தெருவிளக்கு வசதிகள் கட்டாயம் தேவை. ஆனால், ஜமீன் தேவர்குளம் பஞ்சாயத்து அதையும் தாண்டி அசம்பாவிதங்களைத் தடுக்க கண்காணிப்பு கேமராவும், பளிச்சிடும் தெருவிளக்குகள் மற்றும் அறிவிப்புகளை உடனுக்குடன் மக்களுக்கு தெரியப்படுத்த அமைத்திருக்கும் ஒலிப்பெருக்கி ஆகியவை சிறப்பு வாய்ந்தவை. கவனிக்கத்தக்கவையும் கூட. பல சமூக அமைப்புகளும் இக்கிராமத்தை பாராட்டியுள்ளது.

எல்லா கிராமமும் ஜமீன் தேவர்குளம் போல மாறிவிட்டால் நல்லதுதானே!

இ.கார்த்திகேயன்
vikatan

130வது ஆண்டு விழா: காங்கிரசில் இணையுமாறு குஷ்பு அழைப்பு!

காங்கிரஸ் கட்சியின் 130வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து, அக்கட்சியின் அனைவரும் இணையுமாறு நடிகை குஷ்பு அழைப்பு விடுத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட 130வது ஆண்டு விழா (28ஆம் தேதி) கொண்டாடப்பட்டது. இதையடுத்து, டெல்லியில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டு கட்சிக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.

மேலும், அங்கு கூடியிருந்த குழந்தைகளுக்கு சோனியா காந்தியும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் இனிப்புகள் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆனால், அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்ளவில்லை.

நடிகை குஷ்பு

இதுகுறித்து சமீபத்தில் காங்கிரஸ் இணைந்த நடிகை குஷ்பு தனது டிவிட்டர் சமூக வலைதளத்தில், ''காங்கிரசின் 130வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்நாளில் ஒவ்வொரும் காங்கிரசில் இணைந்து , ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தனது டிவிட்டரில், ''காங்கிரஸ் கட்சியின் 130வது தொடக்க தினம் இன்று கொண்டாடுவதை முன்னிட்டு காங்கிரசார் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் டி.என்.ஏ. காங்கிரஸ் கட்சி'' எனக் கூறியுள்ளார்.

2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்

நிகழும் மங்களகரமான 1190ம் ஆண்டு ஸ்ரீஜய வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 17ம் தேதி 1-1-2015 வியாழக் கிழமையும் சுக்ல ஏகாதசியும் பரணி நக்ஷத்ரமும் சிம்ம லக்னமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நள்ளிரவு 12.00 மணிக்கு 2015 ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது.

2015 புத்தாண்டு  பொதுபலன்

சிம்ம லக்னத்தில் வருட பிறப்பு இருப்பதால் லக்னாதிபதி சூரிய பகவான் ஆவார். ஆண்டுதொடக்கத்தில் லக்னாதிபதி சூரியன் லக்னத்துக்கு ஐந்தாம் இடமான தனுசில் சஞ்சாரம்  பெற்றுள்ளார். இதன் பலன் இந்த ஆண்டு அரசியல் சார்ந்த விஷயங்களில் மாற்றத்தைக் காட்டுகிறது.

லக்னாதிபதிக்கு பத்தில் ராகு இருப்பதால் பொது மக்களிடையே வீண் கோபம் உண்டாகும். ஒருவருக்கொருவர் சுமுகமான பேச்சு இல்லாமல் வேகத்துடன் பேசிக் கொள்வார்கள். சுபநிகழ்ச்சிகள் எதிர்பார்த்த அளவு தாராளமாக இருக்கும்.  புத்திரகாரகன் குரு லக்னத்திலேயே இருப்பதால் குழந்தை பிறப்பு அதிகமாகும்.

நோய்கள் மருந்து உட்கொள்வதன் மூலம் சரியாகும். அதேபோன்று கடன் பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். எதிர்ப்புகள் பெரிய பாதிப்பை தராது.

எதிரிகள் தொல்லை,  அண்டை நாடு, பகை நாடுகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களும் கட்டுப்படுத்தப்படும். குருவின் பார்வை 7 ஆம் இடத்தில் பதிவதால் கணவன், மனைவிக்கிடையே சண்டை சச்சரவு தோன்றினாலும் அவை கட்டுப்படுத்தப்படும். சண்டை சமாதானத்தில் முடியும். விவாகரத்துக்கள் குறையும். தொழில் பங்குதாரர்களுக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கும்.

அரசியலில் திடீர் மாற்றங்கள்  உண்டாகலாம். புதிய நபர்களுக்கு அரசியலில் வரவேற்பு இருக்கும். அரசாங்கத்தின் திட்டங்கள் மக்களுக்கு நன்மை செய்பவையாக இருந்தாலும் ஒருசாரார் அதனை குறை கூறுவார்கள். அரசியல்வாதிகள் விமர்சனத்துக்கு உள்ளாவார்கள்.

வாகனங்கள் வாங்குவோரது  எண்ணிக்கை உயரும்.  அதே நேரத்தில் வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் மிகவும் கவனமாக இருப்பது  அவசியம்.  காதல் திருமணங்கள் அதிகரிக்கும். காதல் பிரச்சனைகளும் தலை தூக்கும்.

கிரக பெயர்ச்சி (வாக்கியப்படி):

குருபெயர்ச்சி:
05-07-2015 அன்று கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

பன்னிரு ராசிகளுக்கமான விரிவான பலன்கள் தொடர்ந்து இங்கு இணைக்கப்படும்.

மேஷம்:

இடபம்:

கடகம்:

மிதுனம்:


சிம்மம்:

கன்னி: 

ISIS உடன் சேரச் செல்ல முயன்ற 6 பேரைக் கைது செய்தது இந்தோனேசியா

சனிக்கிழமை இந்தோனேசியா போலிசார் தமது நாட்டில் இருந்து ISIS உடன் இணைவதற்காக சிரியா செல்ல முயன்ற 6 பேரை ஜகார்த்தா சோயேகர்னோ ஹட்டா விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்துள்ளனர்.

போலியான கடவுச் சீட்டுக்களுடன் கைதான இந்த 6 பேரில் 10 வயதுக் குழந்தையுடன் ஓர் திருமண ஜோடியும் அடங்குகின்றனர். மேலும் இப்பயணிகளைத் தொடர்ந்து இவர்களது பயணத்தை ஏற்பாடு செய்திருந்த நபரும் கைது செய்யப் பட்டுள்ளார்.

கைதான பின் பயணிகளிடம் மேற்கொள்ளப் பட்ட விசாரணையின் போதே ஜிஹாதிஸ்ட் போராளிகளுடன் இணைய இவர்கள் முயன்றது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இவர்களது பயணத்தை ஒழுங்கு செய்தவர் மற்றும் பயணத்துக்கான நிதிப் பங்களிப்பை அளித்தவர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. உலகில் மிக அதிக சனத்தொகை கொண்ட முஸ்லிம் நாடான இந்தோனேசியாவில் இருந்து ISIS உடன் இணைவதற்காக ஜூன் மாதம் 86 பேரும் ஆக்டோபரில் 264 பேரும் சிரியா மற்றும் ஈராக்கை நோக்கிச் சென்றுள்ளதாக BNPT எனப்படும் இந்தோனேசியாவின் தேசிய தீவிரவாதத் தடுப்பு ஏஜன்ஸி தெரிவித்துள்ளது.

மேலும் இவ்விடயம் தொடர்பில் BNPT அமைப்பின் தலைவர் சௌட் உஸ்மான் நாசுசன் ஜகார்த்தா போஸ்ட் பத்திரிகைக்கு அளித்துள்ள செய்தியில், இதுவரை ISIS அமைப்பில் சேர்ந்து போராடுவதற்காக 514 இந்தோனேசியர்கள் இங்கிருந்து ஈராக்கும் சிரியாவுக்கும் சென்று சேர்ந்துள்ளனர் எனவும் இதில் அரைவாசிப் பேர் மாணவர்கள் மற்றும் அருகிலுள்ள நாடுகளில் இருந்து இடம்பெயர்ந்து வந்த ஊழியர்கள் ஆவர் எனவும் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அரசியலுக்கு தயாராகிட்டாரா உதயநிதி?

உதயநிதி ஸ்டாலின் தன் படங்கள் ரிலீஸ் ஆகும் போதெல்லாம் ஒரு விஷயத்தில் கவனமாக இருப்பார். அது? யாரும் தியேட்டர் வாசலில் திமுக கொடியை கட்டிவிடக் கூடாது என்பதுதான்.

பூனையோட விரதம் மில்க் ஸ்மெல் வராத வரைக்கும்தான் போலிருக்கிறது. இவரது புதிய படமான ‘நண்பேன்டா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை மவுண்ட் ரோடில் உள்ள ஒரு தியேட்டரில் வைத்திருந்தார்கள். உதயநிதியை வாசலை மறித்து வரவேற்க அப்படியொரு திமுதிமு. திரண்டவர்கள் எல்லாரும் கழக தொண்டர்கள்தான்.

கருப்பு சிவப்பு கொடி பிடித்தபடி ‘கழகமே... தலைவனே...’ என்று கோஷம் போட ஆரம்பித்துவிட்டார்கள். தாரை தப்பட்டை என்று அந்த ஏரியாவே அமர்க்களப்பட, சைலன்ட்டாக உள்ளே வந்து சாதுவாக ட்ரெய்லர் பார்க்கலாம் என்று நினைத்த ரெகுலர் மீடியேட்டர்கள், தியேட்டர்காரர்கள் எல்லாருக்கும் கம்பளிப்பூச்சி கடி! உள்ளேயே நுழைய முடியாதளவுக்கு தள்ளிவிடப்பட்ட விநியோகஸ்தர் சங்க தலைவர் அருள்பதி விட்டார் ஜுட்!

தளபதியோட தளபதி அரசியலுக்கு தயாராகிட்டாரு போல...!

கயல் படத்தில் ஈழத் தமிழன்....

தமிழ்த் திரைப்படங்களுக்கு இன்று உலக அளவில் மிகப் பெரும் வியாபாரம் நடைபெற்று வருவதற்கு முழுமுதற் காரணமாக இருப்பவர்கள் ஈழத் தமிழர்கள்தான். சுமார் 30 வருடங்களுக்கு முன் புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளுக்குச் சென்று குடியேறிய அவர்களால்தான் இன்று உலகம் முழுவதும் தமிழர்கள் பரவிக் கிடக்கிறார்கள்.

ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் ஈழத் தமிழர்கள் அதிகமாக வசித்து வருகிறார்கள். தமிழர்களாக இருந்தாலும் ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து செயல்படும் தமிழ்த் திரையுலகத்தில் நடிகர்களாகவே, தொழில்நுட்பக் கலைஞர்களாகவோ பெரிதும் புகழ் பெற்றதில்லை.

அவர்களுக்கு அப்படி ஒரு நல்ல வாய்ப்பையும் எந்த இயக்குனரும் கொடுத்ததில்லை. ஆனால், அண்மையில் வெளிவந்துள்ள 'கயல்' படத்தில் நார்வே நாட்டைச் சேர்ந்த ஈழத் தமிழரான நகுலன் என்பவரை ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குனர் பிரபு சாலமன் அறிமுகப்படுத்தியுள்ளார்.

படம் முழுவதும் வரும் அவருடைய கதாபாத்திரம் உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் புலம் பெயர் தமிழர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் தமிழர்கள் வசிக்கும் பல சின்னஞ் சிறிய நகரங்களில் கூட ஈழத் தமிழர்கள் கூட்டாகச் சேர்ந்து 'கயல்' படத்தை வாங்கி வெளியிட்டுள்ளார்களாம்.

இதற்கு முன் 'ஆடுகளம்' படத்தில் ஈழத் தமிழ்க் கவிஞரான வ.சு.ஜெயபாலன் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகி தொடர்ந்து சில படங்களில் நடித்தார். 'கயல்' படத்தில் வின்சென்ட் என்ற பெயருடன் அறிமுகமாகும் நகுலன் 8 வயதாக இருக்கும் போது ரஜினிகாந்த் பட போஸ்டர் ஒன்றைப் பார்த்து தானும் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டதாக படத்தின் இசை வெளியீட்டின் போதே தெரிவித்திருந்தார்.

வின்சென்ட்டுக்கு 'கயல்' படம் திரையுலகில் ஒரு வெற்றிகரமான வாசலைத் திறக்க வாழ்த்துவோம்.

அண்ணன் படத்தில் நடிகைக்கு சான்ஸ் வாங்கி கொடுத்த தம்பி!

தம்பி நடிகருடன் அரசியல் படத்தில் நடித்த நடிகைக்கு அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்பே இல்லாமல் போனது.

நான் கதைக்கு தேவப்பட்டால் கிளாமராக கூட நடிக்க ரெடி என அறிவிப்பு கொடுத்தும் கூட நடிகைக்கு வாய்ப்பு வந்த பாடில்லை.

பாவப்பட்ட தம்பி, அண்ணன் நடிக்கும் பெருந்திரள் படத்தில் இரண்டாம் நாயகியாக நடிக்கும் வாய்ப்பை வாங்கித் தந்திருக்கிறார்.

செரிமான பிரச்சனையா? இதை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க

தினசரி வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தப்படும் தயிரானது பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

தயிரில் பல வித உடல்நல பயன்கள் அடங்கியுள்ளது. இதனை தினமும் பயன்படுத்துவது நல்லதாகும். லாக்டோஸ் சகிப்புத் தன்மையின்மையால் அவதிப்படுபவர்களும் எந்த ஒரு கவலையும் இன்றி தயிரை உட்கொள்ளலாம்.

கால்சியம் நிறைந்த தயிர் பற்கள், எலும்புகளில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்கிறது. செரிமான பிரச்சனைக்கு நல்ல ஒரு தீர்வாக இருக்கிறது.

செரிமானத்திற்கு உதவும்

தயிர் வேகமாக செரிமானமாகிவிடும். உணவை வேகமாக உறிஞ்ச உங்கள் உடலுக்கு உதவும். காரசாரமான உணவை சாப்பிட்டால், அதனுடன் சேர்த்து தயிரையும் உண்ணுவது நல்லது.

வாய் பிரச்சனைகள் தீரும்

பாக்டீரியாவால் ஏற்படும் சில வாய் பிரச்சனைகளை தடுக்க தயிர் உதவிடும். தயிரினால் கிடைக்கும் உடல்நல பயன்களில் இதுவும் ஒன்றாகும்.

பசியை அதிகரிக்க

உப்பு அல்லது சர்க்கரையுடன் தயிரை சாப்பிட்டால், பசியை அதிகரிக்க அது மிகவும் நல்லதாகும். தயிரினால் கிடைக்கும் உடல்நல பயன்களில் இதுவும் ஒன்றாகும்.

உடல் எடை குறைப்பு

ஹார்மோன் சமநிலையின்மையின் விளைவால் உடல் பருமன் ஏற்படும். கார்டிசோ அளவுகளை கட்டுப்படுத்தி, உடல் எடையை குறைக்க தயிர் உதவிடும். ஆனால் மற்றவர்களோ தினசரி கலோரி உட்கொள்ளும் அளவை பொறுத்து தான் தயிரை உட்கொள்ள வேண்டும்.

மன அழுத்தத்தை போக்கும்

மன அழுத்தம் உடல் நலத்தை பாதிக்கும். மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்க தயிர் உதவும். தயிரினால் கிடைக்கும் பயன்களில் இதுவும் ஒன்று. தயிர் உங்களை சாந்தப்படுத்தும். உங்களுக்குள் குளிர்ச்சியான உணர்வை உண்டாக்கும்.

மூல நோய்க்கு பலன் அளிக்கும்

மூல நோயால் அவதிப்படுபவர்கள் தயிரை பயன்படுத்தலாம் என ஆராய்ச்சிகள் பரிந்துரைக்கிறது. தயிர் சாதத்துடன் இஞ்சியை சேர்த்து சாப்பிட்டால் உங்களுக்கு நல்ல பயனை அளிக்கும்.

இதயத்திற்கு நல்லது

ஆரோக்கியமான இதயத்தை பேணிட தயிர் உதவிடும். கொலஸ்ட்ரால் அளவுகளை கட்டுப்பாட்டில் வைக்க இது உதவிடும். தயிரை சீரான முறையில் உட்கொண்டு வந்தால், ஆரோக்கியமான இதயத்தை பராமரித்திடலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் தயிர் முக்கிய பங்கு வகிக்கிறது. ஈஸ்ட் தொற்றுக்களால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் இதனை உட்கொண்டால் அதிலிருந்து விடுபடலாம்.

கால்சியத்தை அதிகம் கொண்டது

தயிரில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதனால் அது உங்கள் பற்களுக்கும், எலும்புகளுக்கும் நல்லதாகும். எலும்புத்துளை நோய் போன்ற சில பிரச்சனைகளை தவிர்க்க வேண்டுமானால், சீரான முறையில் தயிரை உட்கொள்வது நல்லது.

பொடுகை நீக்கும்

பொடுகை நீக்க தயிர் சிறந்த தீர்வாக விளங்கும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. உங்கள் தலைச்சருமத்தின் மீது கொஞ்சம் தயிரை தடவினால் போதும், பொடுகு தொல்லை நீங்கும். பூஞ்சை எதிர்ப்பியாக தயிர் செயல்படுவதால், பொடுகை நீக்க இது உதவிடும்.

உங்கள் குழந்தைகளுக்கு அதிக தண்டனை வழங்குகின்றீர்களா?

குழந்தைகளை அதிகமாக தண்டிப்பதே அவர்கள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதற்கு பிரதான காரணமாக அமைவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சவுதி அரேபியாவிலுள்ள King Abdulaziz பல்கலைக்கழத்தின் மருத்துவ பிரிவில் விரிவுரையாளராக திகழும் Dr. Faten Nabeel Al-Zaben என்பவர் தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் 7 வயதிற்கும் 13 வயதிற்கும் இடைப்பட்ட 65 குழந்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை பெண் குழந்தைகளை விட ஆண்குழந்தைகளே தண்டனைகளால் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இரத்த குழாயில் அடைப்பா? பூண்டு சாப்பிடுங்கள்

வெள்ளைப் பூண்டில் நிறைந்திருக்கும் அலைல் சல்பைடு என்னும் பொருள் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

குறிப்பாக இரைப்பை புற்றுநோயை பூண்டு தடுப்பதாக பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், வைட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன.

தினமும் பூண்டை உட்கொண்டு வருவதால் வைரஸ் மற்றும் பாக்டீரியா தாக்குதலில் இருந்து உடலை காத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

மொத்தத்தில், உடலில் நச்சுகள் சேராமல் தடுப்பதில் பூண்டு முக்கியப் பங்கு வகிக்கிறது. மாரடைப்பு மற்றும் இதர இதய நோய் பிரச்சினைகளில் இருந்து பூண்டு பாதுகாக்கிறது.

இதில் உள்ள சல்பர் கலந்த பொருட்கள் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும்.

அதுமட்டுமின்றி, கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மையும் பூண்டுக்கு உண்டு. தொண்டை பிரச்சினைகளுக்கு விடைகொடுக்கும் பூண்டில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பொருட்கள், தொண்டை பிரச்சினைகளிலிருந்து விடுவிக்கிறது.

தொண்டை எரிச்சல்களைக் குணப்படுத்துவதுடன், சுவாசப் பாதை தொற்றுகளின் தீவிரத்தையும் குறைக்கிறது.

மேலும் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைகிறது. பூண்டில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வலி நிவாரண குணங்கள் பல்வலிக்கு நிவாரணம் அளிக்கின்றன.

காளான் ரோஸ்ட்

காளான் அசைவ உணவுகளுக்கு சிறந்த மாற்றாக இருக்கும் ஒரு உணவுப் பொருள்.

காளானைக் கொண்டு அருமையான ரோஸ்ட் செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

சுத்தம் செய்யப்பட்ட காளான் - 3/4 கப் (நறுக்கியது)
சோம்பு - 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு ஊற வைப்பதற்கு...
கெட்டியான தயிர் - 1/4 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
வறுத்த சீரகப் பொடி - 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் நறுக்கி வைத்துள்ள காளானை போட்டு, அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து, தண்ணீர் ஊற்றாமல் நன்கு பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சோம்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து, பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு பொடி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பிறகு அதில் ஊற வைத்துள்ள காளானை சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.

வாணலியில் என்ன நீர்ம நிலையில் இருக்கும் மசாலாவானது சுண்டியதும், அதில் தேங்காயை சேர்த்து 1 நிமிடம் பிரட்டி இறக்கினால், காளான் ரோஸ்ட் ரெடி!!!

பாலிமர் டி.வியின் புதிய தொடர் இருமலர்கள்

பாலிமர் தொலைக்காட்சியில் வருகிற 29ந் தேதி முதல் இரு மலர்கள் என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகிறது. திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 7.30 மணிக்கு ஒளிப்பாகும்.

கணவனை இழந்த ஒரு பெண் திருமணம் மண்டபம் நடத்துகிறார். அவருக்கு திருமண வயதில் இரண்டு பெண்கள். திருமண மண்டபத்தில் பல திருமணங்களை பார்க்கும் தாய்க்கு தன் மகள்களை திருமண கோலத்தில் பார்க்க வேண்டும் என்கிற ஆசை. ஆனால் மகள்கள் வேறு துறைகளில் சாதிக்க போராடிக்கொண்டு திருமணத்தை தள்ளிப்போடுகிறார்கள். தாயின் திருமண ஏக்கம், மகள்களின் லட்சியம் எது நிறைவேறியது என்பதை சொல்லும் கதை.

டிவி சீரியல்களில் கசக்கிப் பிழிகிறார்கள்! -டிவி நடிகை துர்கா பேட்டி

டிவி சீரியல்களில் ஒரு நாளைக்கு 10, 12 சீன்கள்கூட எடுக்கிறார்கள். சில சமயங்களில் சாப்பிடக்கூட நேரம் இருக்காது. அந்த வகையில் நாஙகளெல்லாம் ஒவ்வொரு நாளும் கசக்கிப்பிழியப்படுகிறோம் என்கிறார் டிவி நடிகை துர்கா.

தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...

பெரும்பாலும் அழுகாச்சி கேரக்டர்களாக நடிப்பது ஏன்?

அழுகாச்சி கேரக்டர்களாக நடிக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுவதில்லை. எனது தோற்றம், முக அமைப்பு எல்லாமே ரொம்ப மென்மையானதாக இருப்பதால் எனக்கு அந்த மாதிரியான கேரக்டர்களே தருகிறார்கள். மேலும், சீரியல்களைப் பொறுத்தவரை ரப் அண்ட் டப்பாக நடிக்கும் வேடங்களில் நடிப்பவர்களை திட்டுவார்கள். ஆனால் என்னைப்போன்று சாப்ட்டான வேடங்களில் நடிக்கும் நடிகைகளை தங்களில் ஒருத்தியாக கருதுவார்கள். அந்த வகையில் தமிழ்நாட்டில் சீரியல் பார்க்கும் பெண்கள் எல்லாருமே என் பக்கம்தான் இருக்கிறார்கள்.

இருப்பினும் உங்களுக்கு தொடர்ந்து ஒரேமாதிரியான நடிப்பது போரடிக்கவில்லையா?

சாப்ட்டான வேடம் என்றாலும் ஒவ்வொரு சீரியல்களிலும் ஒவ்வொரு மாதிரியான வேடங்களில்தான் நடிக்கிறேன். அதோடு, நான் நடிக்கும் கேரக்டர்கள் எல்லாமே கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். இப்படி மாறுபட்ட பிரச்சினைகளை உள்ளடக்கிய வேடங்களில் நடிப்பதால் எனக்கு ஒவ்வொரு சீரியல்களிலுமே ஒவ்வொரு மாதிரியான அனுபவம் கிடைக்கிறது. நேயர்களும் எனது நடிப்பை வெகுவாக ரசிக்கிறார்கள். ஆனபோதும், இப்போது நான் நடித்து வரும் சொந்தபந்தம் தொடரில் நான் நடித்து வரும் செளந்தர்யா என்ற கேரக்டர் இதுவரை மென்மையானதாக இருந்தபோதும், இனிமேல் வில்லியாக மாறுகிறது.

அப்படி வில்லியாக மாறும்போது எனக்கு தீங்கு விளைவித்தவர்களை நான் பழிவாங்குவதை நேயர்கள் வரவேற்று கைதட்டுவார்கள். காரணம் அந்த அளவுக்கு நான் இதுவரை கொடுமைகளை அனுபவித்திருக்கிறேன். அதனால் இனி வரும் எபிசோடுகளில் எனது கையே ஓங்கியிருக்கும்.

உங்களது மென்மையான முகம் வில்லி அவதாரத்துக்கு பொருந்துமா?

பூ ஒன்று புயலானது எப்படி என்பது உங்களுக்குத் தெரியாதா? சந்தர்ப்பமும் சூழ்நிலைகளும்தான் நம்மை மாற்றும். அந்த வகையில், கேரக்டர் நெகடீவாக மாறும்போது அதற்கேற்ற பர்பார்மென்ஸை கொடுத்தால் நமமுடைய கெட்டப்பும் டோட்டலாக மாறி விடும். அந்த மாதிரி ஏற்கனவே சில சீரியல்களில் நான் நடித்திருக்கிறேன். அதனால், என்னால் கதைக்கேற்ப எப்படி வேண்டுமானாலும் மாறி நடிக்க முடியும்.

சீரியல் நடிகைகளில் எந்த நடிகையின் நடிப்பு உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்?

என்னை அதிகமாக கவர்ந்த நடிகை என்றால் அது ரம்யா கிருஷ்ணன்தான். சீரியல்களை விட சினிமாவில் அவரது நடிப்பை ரொம்ப ரசிப்பேன். குறிப்பாக, ரஜினியுடன் அவர் நடித்திருந்த படையப்பா படத்தில் பின்னி எடுத்திருப்பார். அதற்கு முன்பு அவர் நடித்திருந்த படங்களை பார்த்தால், ரம்யாகிருஷ்ணனா இது என்று ஆச்சர்யப்படுகிற அளவுக்கு நடித்திருந்தார்.

மற்றபடி சீரியல்களில் ராதிகா மேடம் ரொம்ப பிடிக்கும். எத்தனை வெயிட்டான கதாபாத்திரங்களையும் சுமக்கக்கூடிய நல்ல ஆர்ட்டிஸ்ட். அவரது நடிப்பு ரொம்ப இயல்பாக இருக்கும். இந்தமாதிரி சீனியர்களிடமிருந்தும் நான் நடிப்பு கற்றுக்கொள்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

சீரியல்கள் பார்க்க நேரம் ஒதுக்குவதுண்டா?

ஒரே நேரத்தில் முந்தானை முடிச்சு, சொந்த பந்தம் என இரண்டு மெகா தொடர்களில் நடிப்பதால் நடிப்பதற்கே நேரம் சரியாக உள்ளது. அதனால் நான் நடித்த சீரியல்களையே என்னால் பார்க்க முடிவதில்லை. இருப்பினும், எனது வீட்டில் இருப்பவர்கள் பார்த்து தங்களது கருத்தை சொல்வார்கள். அதேபோல் என் அம்மா நிறைய சீரியல்களைப்பார்ப்பதால், ஒவ்வொரு தொடர்களைப்பற்றியும் அவரிடம் கேட்டு தெரிந்து கொள்வேன்.

மேலும், சில சமயங்களில் நேரம் கிடைத்தால் தமிழ் மட்டுமின்றி இந்தி சீரியல்களையும் பார்ப்பேன். அப்படி நான் பார்த்ததில் தமிழுக்கு டப்பாகியுள்ள சில இந்தி சீரியல்கள் பிரமாதமாகவும், பிரமாண்டமாகவும் இருப்பதைப்பார்த்து ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்.

அப்படியென்றால் இந்தி ரீமேக் தொடர்களில் நடிப்பீர்களா?

ஒரு ஆர்ட்டிஸ்டா எல்லா விதமான கதைகளிலும் நடிக்க ஆசை உள்ளது. அதிலும் அவர்களின் கதை, காட்சி அமைப்புகள் நம்மளை விட வித்தியாசமாககூட உள்ளது. முக்கியமாக ஒரே மாதிரியாக இல்லாமல் குடும்ப பிரச்சினை மட்டுமின்றி, கல்லூரி போன்ற ஜாலியான கதைகளிலும் வருகிறது. அதனால், அந்த மாதிரி தொடர்களில் சான்ஸ் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். அதேசமயம், இந்தி தொடர்களில் சினிமாக்களில் காட்சிகள் வருவது போன்று ஹீரோக்களுடன் நெருக்கமான காட்சிகள் வைக்கிறார்கள். ஆனால் நான் அந்த மாதிரியான காட்சிகளில நடிக்க மாட்டேன். அப்படி நடிக்க பிடிக்காமல்தான் சினிமாவில் நடிப்பதைகூட நான் தவிர்த்து வருகிறேன்.

சீரியல்களில் அதிக வேலைப்பளு இருப்பதாக கூறப்படுகிறதே?

உண்மைதான், ஒரே நாளில் 10,12 சீன்கள்கூட எடுக்கிறார்கள். இதனால் காலையில் ஸ்பாட்டுக்கு செல்லும் நாங்கள் மாலை வீடு திரும்பும் வரை துளியும் இடைவேளை இல்லாமல் நடிக்கிறோம். சில சமயங்களில் மதியம் சாப்பிடகூட நேரம் இருக்காது. அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு ஓடுவோம். அந்த வகையில், டிவி சீரியல்களில் நடிப்பவர்களை கசக்கிப்பிழிகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும் என்கிறார் துர்கா.

மீண்டும் சின்னத்திரையில் மதுமிதா

சின்னத்திரையில் காமெடி நடிகையாக அறிமுகமான மதுமிதா ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தார். சினிமாவில் காமெடி நடிகைளுக்கு பஞ்சம் இருப்பதால் மதுமிதா ஒரு ரவுண்ட் வருவார் என்றே கணிக்கப்பட்டது. ஓகே ஓகேவுக்கு பிறகு இதற்குதானே ஆசைப்பட்டாய் படம் அவருக்கு பெரிய அளவில் கைகொடுத்தது. அதில் தாதாவின் மனைவி பேபியாக நடித்தது பெரும் வரவேற்பை பெற்றது.

கோவை சரளா, மனோரமா மாதிரி தனி காமெடி நடிகையாக உருவெடுப்பார் என்று கருதப்பட்ட மதுமிதாவுக்கு பிறகு பெரிய வாய்ப்புகள் இல்லை. இதனால் மீண்டும் சின்னத்திரைக்கே திரும்பி விட்டார் தற்போது மடிபாக்கம் மாதவன், சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடர்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். என்றாலும் முனி 3யில் முக்கியமான காமெடி ரோலில் நடித்திருக்கிறார். அந்த படம் வெளிவந்தால் தனக்கு நல்ல வாய்ப்புகள் அமையும் என்று நம்புகிறார்.

ஈராக்கில் இருந்து ISIS நோக்கி ராக்கெட் அடிக்கும் 9 வயதுச் சிறுவன் இவன் தான்!

ஈராக்கின் எல்லை புற நகரங்களில், ISIS பயங்கரவாதிகள் ஊடுருவி வருகிறார்கள். இவர்களை எதிர்த்து அமெரிக்க படைகளும் ஈராக் ராணுவமும் போராடி வருகிறது. ஆனால் சில நகரங்களை அந்த நகரத்தில் உள்ள மக்களே பாதுகாத்து வருகிறார்கள். பெண்கள் சிறுவர்கள் கூட ஆயுதங்களை ஏந்திப் போராடி வருகிறார்கள். இங்கே நீங்கள் பார்பது ஈராக்கில் உள்ள நகரம் ஒன்றில் 9 வயதுச் சிறுவன் ராக்கெட் குண்டுகளை ஏவுவது தான். இவன் ISIS பயங்கரவாதிகள் இருக்கும் திசை நோக்கி ராக்கெட் குண்டுகளை ஏவி வருகிறான்.

காரில் பொருத்தப்பட்டுள்ள இக் குண்டுகளை இவன் ஏவுவதை, சிலர் படம் எடுத்து இணையத்தளங்களில் வெளியிட்டுள்ளார்கள். ISIS பயங்கரவாதிகள் நகரங்களுக்குள் வந்தால், அவர்கள் அந்த நகரில் உள்ள மக்களை அடிமைகளாக்கி பெண்களை பாலியல் கைதிகள் ஆக்குகிறார்கள். இதனால் தம்மை பாதுகாக்க,  பொதுமக்களே போராடவேண்டி உள்ளது.

மட்டக்களப்பில் மைத்திரியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்! ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டவர்கள் மீது ஆயுததாரிகளினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இன்று காலை இரண்டு வெள்ளை நிற வான்களின் துப்பாக்கிகள், பொல்லு மற்றும் கத்திகளுடன் வந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை சேர்ந்தவர்களே இந்த தாக்குதலை நடத்தியதாக ஐ.தே.க.கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரச்சாரத்திற்கு பொறுப்பான க.மோகன் தெரிவித்தார்.

இதன்போது இருவர் படுகாயமடைந்துள்ளதுடன், ஒருவர் காணாமல்போயுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறையிடச் சென்றபோது முறைப்பாட்டினை பெற்றுக் கொள்வதில் இழுத்தடிப்புகள் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தம்மீது தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தெரிவித்தபோதிலும் அவர்கள் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

கேள்வி கேட்ட இளைஞர் ஒருவர் மீது பிள்ளையான் கடும் தாக்குதல்! இளைஞன் வைத்தியசாலையில்!

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானை மேடையில் வைத்து கேள்வி கேட்ட இளைஞர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு கலுதாவலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

23 வயதான குறித்த இளைஞர் மகிந்தவுக்கு ஆதரவான பிரசார மேடையில் வைத்து, மகிந்த இனப்படுகொலைகளை புரிந்துள்ளமை எங்களுக்கு தெரியும். அந்த வகையில் நீங்கள் என்ன சாதனை செய்திருக்கிறீர்கள் என்று பிள்ளையானை பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனை அடுத்து பிள்ளையான் தமது உதவியாளரான பிரசாந்தனிடம் ஏவி, குறித்த இளைஞரை பிடித்து வாகனம் ஒன்றினுள் வைத்து கடுமையாக தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை அடுத்து அவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் கவலைக்கிடமான முறையில் இருப்பதாக கூறப்படுகிறது.