Sunday, December 28, 2014

14 வயது சிறுவன் உயிரை பறித்த பொலிஸ்

கனடா - பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வாகனத்தில் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் மோதியதில் 14 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

அபொற்ஸ்வோட் என்ற இடத்தில் நடந்த இந்த பயங்கர சம்பவம் ஒரு மரத்திற்கு அருகில் நடந்ததால் பல வாலிபர்கள் அவ்விடத்தில் கூடி தங்கள் அனுதாபத்தை தெரிவித்துள்ளனர்.

உடனடியாக விமான மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு விரையப்பட்ட போதும் பலத்த காயங்கள் காரணமாக அந்த சிறுவன் இறந்து விட்டான்.

நடந்த இச்சம்பவத்தில் கொல்லப்பட்ட சிறுவன் 14வயதுடைய மார்க்கஸ் லறாபி என குடும்பத்தினராலும் நண்பர்களினாலும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வாகனம் ஓட்டி வந்த அந்த பொலிஸ் அதிகாரி அப்போது பணியில் இல்லாதது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக பொலிசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment