Saturday, December 27, 2014

எட்டு பேருக்கு வாழ்வு கொடுத்த 14 வயது சிறுவன்

கனடாவை சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது எட்டு உடல் உறுப்புகளை தானமாக வழங்கியுள்ளான்.

கனடா- ஒட்டாவை சேர்ந்த மார்க் மற்றும் ஹெதர் மக்கினனின் மகன் கமரன் (வயது 14).

மூளைக்குருதி நாள நெளிவு நோய் காரணமாக கமரன், கடந்த 22ம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

உயிர் ஆதரவு கருவிகளுடன், கடந்த 24ம் திகதி வைக்கப்பட்டிருந்த நிலையில், அவனது எட்டு உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர்கள் முன்வந்துள்ளனர்.

இந்நிலையில் 24ம் திகதி குடும்பத்தினர் சூழ நின்ற நிலையில் மாலை 6.40 மணியளவில் கமரனின் உயிர் பிரிந்தது.

இதுகுறித்து கமரனின் பெரிய அத்தை கூறுகையில், துயரத்திலும் ஒரு நிறைவாக மற்றவர்களுக்கு வாழ்க்கையை பரிசாக கொடுக்க ஆசிர்வதிக்கப்பட்டுள்ளான், இது அனைவருக்கும் நம்ப முடியாத பேரிடியாக அமைந்தது என தெரிவித்துள்ளார்.

கனடாவில் மட்டும் 4,500 நபர்கள் உடலுறுப்பு தானத்திற்காக காத்திருக்கின்றனர் என்றும், இவர்களில் ஒன்ராறியோவில் மட்டும் 1,500 பேர்கள் உள்ளனர் எனவும் மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment