Saturday, December 27, 2014

பெண் குழந்தையைக் காப்போம்,பெண் குழந்தைகளுக்கு கல்வி கொடுப்போம் :பிரதமர்

பெண் குழந்தையைக் காப்போம்,பெண் குழந்தைகளுக்கு கல்வி கொடுப்போம் எனும் புதியத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்க உள்ளார்.

நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற நிலையில் பல்வேறு புதியத் திட்டங்களை அதிரடியாக அவ்வப்போது அறிவித்து, அதன் செயல் திட்டங்களிலும் இறங்கி விடுகிறார்.இதை பலர் ஆதரித்தாலும், எதிர்க்கட்சிகள் குறைக் கூறாமல் இல்லை. அப்படி வருகிற ஜனவரி மாதம் 22ம் திகதி ஹரியானாவில் உள்ள பானிப்பட் மாவட்டத்தில் பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கல்வி கொடுப்போம் என்கிற புதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளார்.

பெண் குழந்தைகளுக்கு கல்வி கொடுப்பது என்பது ஒரு சமுதாயத்துக்கே கல்வி அளிப்பது போன்ற பலனை கொடுக்கும் என்றும் மோடி தமது அறிவிப்பில் தெரிவித்துள்ளார். இன்னமும் பெண் குழந்தைகளை காப்பகத்தில் விட்டுவிடுவது என்பதும், பெண் குழந்தைகள் என்றால் கல்வி மறுக்கப்படுவது என்பதும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது என்பது பிரதமரின் இந்த அறிவிப்பின் மூலம் தெள்ளத் தெளிவாகிறது என்பதுதான் உண்மை.

No comments:

Post a Comment