Sunday, December 28, 2014

அரசியலுக்கு தயாராகிட்டாரா உதயநிதி?

உதயநிதி ஸ்டாலின் தன் படங்கள் ரிலீஸ் ஆகும் போதெல்லாம் ஒரு விஷயத்தில் கவனமாக இருப்பார். அது? யாரும் தியேட்டர் வாசலில் திமுக கொடியை கட்டிவிடக் கூடாது என்பதுதான்.

பூனையோட விரதம் மில்க் ஸ்மெல் வராத வரைக்கும்தான் போலிருக்கிறது. இவரது புதிய படமான ‘நண்பேன்டா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை மவுண்ட் ரோடில் உள்ள ஒரு தியேட்டரில் வைத்திருந்தார்கள். உதயநிதியை வாசலை மறித்து வரவேற்க அப்படியொரு திமுதிமு. திரண்டவர்கள் எல்லாரும் கழக தொண்டர்கள்தான்.

கருப்பு சிவப்பு கொடி பிடித்தபடி ‘கழகமே... தலைவனே...’ என்று கோஷம் போட ஆரம்பித்துவிட்டார்கள். தாரை தப்பட்டை என்று அந்த ஏரியாவே அமர்க்களப்பட, சைலன்ட்டாக உள்ளே வந்து சாதுவாக ட்ரெய்லர் பார்க்கலாம் என்று நினைத்த ரெகுலர் மீடியேட்டர்கள், தியேட்டர்காரர்கள் எல்லாருக்கும் கம்பளிப்பூச்சி கடி! உள்ளேயே நுழைய முடியாதளவுக்கு தள்ளிவிடப்பட்ட விநியோகஸ்தர் சங்க தலைவர் அருள்பதி விட்டார் ஜுட்!

தளபதியோட தளபதி அரசியலுக்கு தயாராகிட்டாரு போல...!

No comments:

Post a Comment