Saturday, December 27, 2014

தேவயானி கொப்ரகடே மீது ஒழுங்கு நடவடிக்கை:சையத் அக்பருதீன்

தேவயானி கொப்ரகடே மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய வெளியுறவுத் துறை செயலர் சையத் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.

தேவயானி அமெரிக்காவுக்கான இந்தியத் துணைத் தூதராக இருந்தபோது பணிப்பெண்ணுக்கான விசா பெறுவதற்கு முறைகேடாக ஆவணங்கள் சமர்ப்பித்தார் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டு, இன்றுவரை அவருக்கு அமெரிக்க விசா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இவர் மீது சுமத்தப்பட்ட வழக்கும் அமெரிக்க நீதிமன்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தேவயானி கோப்ரகடே யாருக்கும் தெரிவிக்காமல், தமது இஷ்டத்துக்கு தமது மகனுக்கு அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பித்து உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இதனால் தேவயானி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை செயலர் சையத் அக்பருதீன் தகவல் வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment